
நீ சேலையில் வருகிறாய் சாலையில் அனைவரும் சிலையாய் நிற்க
சேலை கட்டிக்கொண்ட சந்தோஷம் உன் முகத்தில்
உன்னை கட்டிக்கொண்ட சந்தோஷம் சேலையின் மிதப்பில்
இன்னும் எத்தனை இதயங்களை இலவம்பஞ்ச்சாக்கப்போகிறாய்,
உன் கொப்பளிக்கும் புன்னகையால் ..
போதும் பெண்ணே இனி இல்லை என்னிடம் இழப்பதற்கு இன்னொரு இதயம்.
உன் விழிகள் போடும் ஆட்டத்தில் அதிர்வதென்னவோ என் இதயம் தான்
அரை நிமிடத்தில் பதரவைத்துவிடுகிறாய் அருகே வரும்போதெல்லாம் ..
ஏன் உன்னை இப்படி நினைத்ததுதொலைக்கிறேன் என்னையும் மறந்து.
நான் என்னுடயது என்று நினைத்திருந்த ஒன்றயும் உன் பின்னே அழைத்துச்சென்றுவிட்டாய், இங்கே என்னை புலம்ப வைத்துவிட்டு..
Horoscope
Sep 6, 2009
பெண்ணே
Posted by SURYAN at 12:41 PM 0 comments
Labels: kadhal, kavidhaigal, kavithai, love
Sep 5, 2009
கத்திசண்டை
ஏன் என் கண்களோடு இந்த கத்திசண்டை..
பின் என் கண் பட்டதால் தான் காயம் வந்தது என்று குறை சொல்வாய்..
நன்றாக பார் காயம் வந்ததா இல்லை
காதல் வந்ததா என்று..!!
Posted by SURYAN at 12:52 PM 0 comments
Labels: kavidhaigal, love, love poem
Aug 20, 2009
Aug 19, 2009
காத்திருக்கிறேன்
என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான் என்று சொல்லடா என..!!
சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது..!!
Posted by SURYAN at 9:57 AM 0 comments
Labels: kavidhaigal, love, tamil kavithaigal
Aug 14, 2009
இதய கடிகாரம்
நீயென்ன
என் இதய கடிகாரத்தின் முட்களா
நீ இன்றி இயங்க மறுக்கிறது என் இதயம்..!!
Posted by SURYAN at 8:06 PM 0 comments
Labels: idhayam, kavidhaigal, love
Aug 12, 2009
இதயம்
அவளை மட்டுமே நினைத்து துடித்துக்கொண்டிருக்கும்
என் இதயத்திற்கு புரியவில்லை
அவளுக்கு இதயமே இல்லை என்று
Posted by SURYAN at 7:44 PM 0 comments
Labels: idhayam, kavidhaigal, love
Aug 8, 2009
Aug 7, 2009
கண்ணே

கண்ணே போதும் நிறுத்திவிடு
இல்லையேல்
காதலெனும் வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் நான்
மூழ்கிவிடுவேன்..!!
Posted by SURYAN at 3:31 PM 0 comments
Labels: eyes, kadhal, kavidhaigal, love, poems
Aug 5, 2009
காதலும் கடவுளும்
Aug 4, 2009
Aug 3, 2009
Jul 29, 2009
கவிதையாகிய அவள் விழி..
Posted by SURYAN at 8:45 PM 1 comments
Labels: devathai, kadhal, kavidhaigal, life, love, love poem, poems, tamil kavithaigal, tears
Jul 28, 2009
என் வீட்டு மலர்கள்

என் வீட்டு மலர்களுக்குத்தான் அவள் மேல் எத்தனை காதல்..
நான் என்றோ சொன்ன வார்த்தையைக்கேட்டு
அவள் கூந்தலோடு வாழ்ந்துவிட்டு தான் சாவேன் என்று இன்றளவும் வாடாமல் காத்திருக்கிறது..!!
Posted by SURYAN at 4:23 PM 0 comments
Labels: flowers, kavidhaigal, life, love, poems
ராமன்..ராவணன்..

எங்களுக்காக போட்டியிட்டு மணமுடிக்க ராமன் வராவிட்டாலும்..
கடத்திக்கொண்டு போக ராவணனாவது வரமாட்டானா
என ஏங்கும் செவ்வாய் தோஷக்கன்னிகள்..!!>
Posted by SURYAN at 4:21 PM 0 comments
Labels: history, kavidhaigal, life, love, sad
அன்றில் பறவை

அழகாய் அவசரமாய் ஒரு கவிதை சொல்ல முற்பட்டு அவள் கண்களை பார்த்தேன்..
வெண் மேகத்தில் சிகப்பு மின்னல்கள்,
அதனோடு அன்றில் பறவை போல் அவள் கருவிழிகள் அங்கும்மிங்குமாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன..!!
Posted by SURYAN at 4:03 PM 0 comments
தண்ணீரையும்
Posted by SURYAN at 12:49 PM 0 comments
Labels: divine, kavidhaigal, love, love poem, water
Jul 27, 2009
இதய சீஸ்மோகிராப்
நீ எங்கோ ஒரு சாலையில் அடியெடுத்து
வைக்கும்போதே..
என் இதய ஸீஸ்மோகிராப்ஃபில்
அழகான கீறல்கள்
பதியத் தொடங்கிவிடுகின்றன..!!
Posted by SURYAN at 4:47 PM 0 comments
Labels: idhayam, kavidhaigal, love, love poem, seismograph
Jul 26, 2009
உன் வெட்கம் ரசிக்க.. காத்திருக்கிறேன்..
உன் பெயர் என்னவென்று தெரியாது...
நான் வளர்க்கும் பறவைகளிடம்...
தேவதை என்றே சொல்லி வைத்திருக்கிறேன்...
நீ வீடு வரும் நாளில்...
நான் சொல்லாமலே எல்லா பறவைகளும்...
கத்தப் போகின்றன... தேவதை தேவதை என்று...
காத்திருக்கிறேன்... உன் வெட்கம் ரசிக்க.. !!
Posted by SURYAN at 1:14 PM 0 comments
Labels: birds, flowers, kavidhaigal, love, tamil kavithaigal
தேவதை
என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...
முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...
உங்களை தொட்டுப் பறிக்க...
தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...
அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...
Posted by SURYAN at 1:13 PM 0 comments
Labels: devathai, kadhal, kavidhaigal, love, poems
காதல் கணக்குகள்
லாபக் கணக்குகளை
போட்டு முடிப்பதற்குள்
நஷ்டம் வந்து விடுகிறது
காதலில்...
நேற்றைய அவளின் சிரிப்பை
முழுவதுமாய் ரசித்து முடிக்கும் முன்
இன்று முறைத்து விட்டு
போகிறாள்..
சந்தோஷ கனவுகளை
கவிதை ஆக்குவதற்குள்
சோகத்தை என் முன்
கொட்டி விட்டு போய் விடுகிறாள் ...!!
Posted by SURYAN at 1:02 PM 0 comments
Labels: kadhal, kavidhaigal, kavithai, love








