
அர்த்தம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
அலைமோதவைப்பது காதல்..
ஆதாரம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
ஆட்சி செய்வது கடவுள்..
இரண்டுமே அர்த்தமில்லாதது..!!
Horoscope
Aug 5, 2009
காதலும் கடவுளும்
Jul 29, 2009
கவிதையாகிய அவள் விழி..
Posted by SURYAN at 8:45 PM 1 comments
Labels: devathai, kadhal, kavidhaigal, life, love, love poem, poems, tamil kavithaigal, tears
Jul 28, 2009
இதய தேவதை

நாளை வரப்போகும் என் இதய தேவதைக்காக..
நான் என்றோ வாங்கி வைத்த மெத்தையும் ,தலையணையும் ,மிக்ஸியும் ,க்ரைண்டரும் என்னைப் பார்த்து ஏக்கத்தோடு கேட்கிறது எப்போதடா அழைத்து வருவாய்
எங்களுக்கு உயிர் கொடுக்கப்போகும் தேவதையை என்று..!!
Posted by SURYAN at 4:42 PM 0 comments
Labels: heart, kavidhaigal, life, love poem, tamil kavithaigal, world
என் வீட்டு மலர்கள்

என் வீட்டு மலர்களுக்குத்தான் அவள் மேல் எத்தனை காதல்..
நான் என்றோ சொன்ன வார்த்தையைக்கேட்டு
அவள் கூந்தலோடு வாழ்ந்துவிட்டு தான் சாவேன் என்று இன்றளவும் வாடாமல் காத்திருக்கிறது..!!
Posted by SURYAN at 4:23 PM 0 comments
Labels: flowers, kavidhaigal, life, love, poems
ராமன்..ராவணன்..

எங்களுக்காக போட்டியிட்டு மணமுடிக்க ராமன் வராவிட்டாலும்..
கடத்திக்கொண்டு போக ராவணனாவது வரமாட்டானா
என ஏங்கும் செவ்வாய் தோஷக்கன்னிகள்..!!>
Posted by SURYAN at 4:21 PM 0 comments
Labels: history, kavidhaigal, life, love, sad
Jul 26, 2009
இதயத்தழும்புகள்
உன் நினைவுகளே வேண்டாம் என்று
என் இதய சுவர்களில் மாட்டி இருந்த
உன் புகைப்படங்களை தூக்கி எறிந்தேன்...
ஆனால் இன்னும் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது
உன் புகைபடங்களை மாட்டி வைப்பதற்காக
அடிக்கப்பட்ட ஆணிகளின்
தழும்புகள்..
Posted by SURYAN at 12:57 PM 0 comments
Labels: kadhal, kavidhaigal, life, love, poems



