
கவிதை கண்டேன் உன் கருவிழியில்,
இனி கலங்காதே..நீ கலங்கினால்..
கவிதையுடன் என் இதயமும் நனைந்துவிடும்..!!
Horoscope
Jul 29, 2009
கவிதையாகிய அவள் விழி..
Posted by SURYAN at 8:45 PM 1 comments
Labels: devathai, kadhal, kavidhaigal, life, love, love poem, poems, tamil kavithaigal, tears
Jul 28, 2009
திருவிழா

திருவிழாவுக்கு அனைவரும் தந்தையையும் தாயையும் அழைத்துக்கொண்டுவர,
நீ மட்டும் தானேயடி
திருவிழாவையே அழைத்ததுக்கொண்டு வந்தாய்..!!
Posted by SURYAN at 11:49 AM 0 comments
Labels: devathai, kavidhaigal, tamil kavithaigal, thiruvizha
Jul 26, 2009
தேவதையின் குணங்கள்..

உன்னை மார்பில் சாய்த்தபடி...
குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்...
உன் மடியில் சாய்ந்தபடி....
என் மரணம் வரை உறங்க வேண்டும்...
உன் கண்களில் வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும் கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை காதல் இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்...
Posted by SURYAN at 1:18 PM 0 comments
Labels: devathai, kadhal, kavidhaigal
தேவதை
என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...
முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...
உங்களை தொட்டுப் பறிக்க...
தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...
அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...
Posted by SURYAN at 1:13 PM 0 comments
Labels: devathai, kadhal, kavidhaigal, love, poems
தேவையின் தேவதை !!
என் தேவைக்கு தேடினேன்..
தேவதையாக இருக்கும் உன்னை..
நீயும் தேவதையாக தான் இருந்தாய்..
உன் தேவைகள் தீரும் வரை...!!
Posted by SURYAN at 12:50 PM 0 comments
Labels: devathai, kadhal, kavidhaigal, kavithai, love


