DOWNLOAD FREE CSS TEMPLATES..IMAGES..SONGS..VIDEO..PICTURE..KAVITHAIGAL..GOOGLE GADGETS..JAVASCRIPT..VIDEO..GOOGLE..LAYOUT..LABELS..LINKS.. AND BACKGROUNDS

Ad Brite

Showing posts with label kadhal. Show all posts
Showing posts with label kadhal. Show all posts

Sep 6, 2009

பெண்ணே




நீ சேலையில் வருகிறாய் சாலையில் அனைவரும் சிலையாய் நிற்க

சேலை கட்டிக்கொண்ட சந்தோஷம் உன் முகத்தில்

உன்னை கட்டிக்கொண்ட சந்தோஷம் சேலையின் மிதப்பில்


இன்னும் எத்தனை இதயங்களை இலவம்பஞ்ச்சாக்கப்போகிறாய்,
உன் கொப்பளிக்கும் புன்னகையால் ..

போதும் பெண்ணே இனி இல்லை என்னிடம் இழப்பதற்கு இன்னொரு இதயம்.


உன் விழிகள் போடும் ஆட்டத்தில் அதிர்வதென்னவோ என் இதயம் தான்

அரை நிமிடத்தில் பதரவைத்துவிடுகிறாய் அருகே வரும்போதெல்லாம் ..


ஏன் உன்னை இப்படி நினைத்ததுதொலைக்கிறேன் என்னையும் மறந்து.

நான் என்னுடயது என்று நினைத்திருந்த ஒன்றயும் உன் பின்னே அழைத்துச்சென்றுவிட்டாய், இங்கே என்னை புலம்ப வைத்துவிட்டு..

Aug 25, 2009

சேலை



நீ

சேலை கட்டி வரும்போது தான்

எனக்கு பயமாய் இருக்கிறது ..!!

எங்கே சேலையும் என்போல் சரிந்து விடுமோ என்று !!

Aug 7, 2009

கண்ணே





கண்ணே போதும் நிறுத்திவிடு
இல்லையேல்
காதலெனும் வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் நான்
மூழ்கிவிடுவேன்..!!

Aug 6, 2009

வானவில்



ஒரு வெள்ளைக்காகிதத்தையும்

அத்தனை அழகாக்கிக்கொண்டிருந்தது அவள் பெயர்..

வானவில்லும் ஒளிந்திருக்குமோ

அவள் பெயரில்..!!

UNNAI MARAKKA NINAITHA NERAM

Aug 5, 2009

காதல்

இதய சுவர்கள்



என் இதய சுவர்களில்

இன்றும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது

பிரியும் முன் நீ பேசிச் சென்ற வார்த்தைகள்..!!

Aug 4, 2009

தேனீ


உனக்காகவே பிறந்தேன்..

உனக்காகவே வளர்ந்தேன்..

உனக்காகவே சாகிறேன்..

- தேனிடம் வண்டு

Jul 29, 2009

கவிதையாகிய அவள் விழி..




கவிதை கண்டேன் உன் கருவிழியில்,

இனி கலங்காதே..நீ கலங்கினால்..

கவிதையுடன் என் இதயமும் நனைந்துவிடும்..!!

Jul 26, 2009

தேவதையின் குணங்கள்..


உன்னை மார்பில் சாய்த்தபடி...
குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்...
உன் மடியில் சாய்ந்தபடி....
என் மரணம் வரை உறங்க வேண்டும்...

உன் கண்களில் வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும் கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை காதல் இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்...

தேவதை

என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...

முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...

உங்களை தொட்டுப் பறிக்க...

தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...

அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...

காதல் கணக்குகள்

லாபக் கணக்குகளை
போட்டு முடிப்பதற்குள்
நஷ்டம் வந்து விடுகிறது
காதலில்...

நேற்றைய அவளின் சிரிப்பை
முழுவதுமாய் ரசித்து முடிக்கும் முன்
இன்று முறைத்து விட்டு
போகிறாள்..

சந்தோஷ கனவுகளை
கவிதை ஆக்குவதற்குள்
சோகத்தை என் முன்
கொட்டி விட்டு போய் விடுகிறாள் ...!!

இதயத்தழும்புகள்


உன் நினைவுகளே வேண்டாம் என்று

என் இதய சுவர்களில் மாட்டி இருந்த

உன் புகைப்படங்களை தூக்கி எறிந்தேன்...

ஆனால் இன்னும் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது

உன் புகைபடங்களை மாட்டி வைப்பதற்காக

அடிக்கப்பட்ட ஆணிகளின்

தழும்புகள்..

என் கவிதைகள் ..

எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின்
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி,
இன்னும்
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய
மொழிகளின்
அரைகுறையான
மொழி பெயர்ப்புகளே
என் கவிதைகள்...!!

தேவையின் தேவதை !!


என் தேவைக்கு தேடினேன்..

தேவதையாக இருக்கும் உன்னை..

நீயும் தேவதையாக தான் இருந்தாய்..

உன் தேவைகள் தீரும் வரை...!!

புன்னகை

ஆயிரம் உறவுகள் என்னை சூழ்ந்திருந்த போதும்.,

உன் புன்னகைக்காக ஏங்கும் என் இதயத்தை பார்த்து,

ஏளனமாகவாவது சிரித்து விட்டு போ..

Jun 28, 2009

சந்தோஷம்



சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட,

நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு,

உன் வாழ்வில் நிறைவு இருக்கும்..!!

Freshers World