
கவிதை கண்டேன் உன் கருவிழியில்,
இனி கலங்காதே..நீ கலங்கினால்..
கவிதையுடன் என் இதயமும் நனைந்துவிடும்..!!
Horoscope
Jul 29, 2009
கவிதையாகிய அவள் விழி..
Posted by SURYAN at 8:45 PM 1 comments
Labels: devathai, kadhal, kavidhaigal, life, love, love poem, poems, tamil kavithaigal, tears
Jul 28, 2009
இதய தேவதை

நாளை வரப்போகும் என் இதய தேவதைக்காக..
நான் என்றோ வாங்கி வைத்த மெத்தையும் ,தலையணையும் ,மிக்ஸியும் ,க்ரைண்டரும் என்னைப் பார்த்து ஏக்கத்தோடு கேட்கிறது எப்போதடா அழைத்து வருவாய்
எங்களுக்கு உயிர் கொடுக்கப்போகும் தேவதையை என்று..!!
Posted by SURYAN at 4:42 PM 0 comments
Labels: heart, kavidhaigal, life, love poem, tamil kavithaigal, world
தன்னம்பிக்கை

பத்து முறை விழுந்தவனை பூமித்தாய் முத்தமிட்டு கேட்டாளாம்..
நீ தானேயடா,
ஒன்பது முறை விழுந்தும் எழுந்து நின்றவன் என்று...!!
Posted by SURYAN at 4:31 PM 0 comments
Labels: kavithai, tamil kavithaigal, thanambikkai
என் வீட்டு மலர்கள்

என் வீட்டு மலர்களுக்குத்தான் அவள் மேல் எத்தனை காதல்..
நான் என்றோ சொன்ன வார்த்தையைக்கேட்டு
அவள் கூந்தலோடு வாழ்ந்துவிட்டு தான் சாவேன் என்று இன்றளவும் வாடாமல் காத்திருக்கிறது..!!
Posted by SURYAN at 4:23 PM 0 comments
Labels: flowers, kavidhaigal, life, love, poems
ராமன்..ராவணன்..

எங்களுக்காக போட்டியிட்டு மணமுடிக்க ராமன் வராவிட்டாலும்..
கடத்திக்கொண்டு போக ராவணனாவது வரமாட்டானா
என ஏங்கும் செவ்வாய் தோஷக்கன்னிகள்..!!>
Posted by SURYAN at 4:21 PM 0 comments
Labels: history, kavidhaigal, life, love, sad
அன்றில் பறவை

அழகாய் அவசரமாய் ஒரு கவிதை சொல்ல முற்பட்டு அவள் கண்களை பார்த்தேன்..
வெண் மேகத்தில் சிகப்பு மின்னல்கள்,
அதனோடு அன்றில் பறவை போல் அவள் கருவிழிகள் அங்கும்மிங்குமாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன..!!
Posted by SURYAN at 4:03 PM 0 comments
தண்ணீரையும்
Posted by SURYAN at 12:49 PM 0 comments
Labels: divine, kavidhaigal, love, love poem, water



